சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் இளம் பெண் ஒருவர் நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். Micro Credit Collection Issues Batticaloa Family Woman Suicide
பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா – பிரசாந்தினி (வயது-24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அலரி விதையை உட்கொண்ட நிலையில்குறித்த பெண் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com