(eight people submitted applications for executioner tamil news)
தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கு இணைத்துக் கொள்ளுமாறு 8 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த பதவிக்கான விண்ணப்பங்களை பெற இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை எனவும் எதிர்வரும் 27 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் சிறைச்சாலை தலைமையகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் இவர்களில் மூன்று பேர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மரண தண்டனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையி்ல், மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
(eight people submitted applications for executioner tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது