சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை

0
602
Police no power arrest illegal liquor dealers

சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, வழக்குத் தொடரும் அதிகாரம் கலால் பிரேரணை கட்டளையின்படி பொலிஸாருக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. (Police no power arrest illegal liquor dealers)

வத்தளை நீதிமன்ற அதிகார பகுதியில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வத்தளை நீதிமன்றத்தால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி குறித்த பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகள் இடைநிறுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதனால் வத்தளை, பமுணுகமை, மஹபாகே பொலிஸ் பிரிவில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்கள் மிகப் பெரியளவில் உற்பத்தியில் ஈடுபடுவதாகவும், இதனை பாவிக்கும் மக்களும் அதிகரித்துள்ளதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக சட்டவிரோத மதுபானத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தமை போன்று பொலிஸார் எடுக்கவேண்டும் என பொலிஸ் தலைமையகத்தில் வினவியபோது,

இதுபோன்ற நிலைமை ஒன்று கம்பஹா பிரதேசத்தில் உண்டான போது, கம்பஹா மேலதிக நீதவான் பொலிஸாருக்கு சட்டவிரோத மதுபானத்தை கட்டுப்படுத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தார் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Police no power arrest illegal liquor dealers