தாய் மற்றும் மகள் நீராடிக்கொண்டிருந்த போது நடந்த பரிதாபம்

0
557
mother daughter bath river missing recover body Tamil latest news

குருநாகல் – சுபசெதகம மகா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். mother daughter bath river missing recover body Tamil latest news

நேற்று பிற்பகல் குறித்த இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதை தொடர்ந்து , காவற்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

40 வயதுடைய தாயும் அவரின் 10 வயது புதல்வி ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக கொபெய்கனே பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் நிகவரெடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
mother daughter bath river missing recover body Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites