விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை

0
867
Namal Rajapaksa commented Northern politicians

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கதைக்காமல் வடக்கு அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். (Namal Rajapaksa commented Northern politicians)

தேர்தல்களின் போது விடுதலைப் புலிகளின் பாடல்களை பிரசாரக் கூட்டங்களில் ஒலிக்கவிடுவது, அவர்கள் குறித்துப் பேசுவது, அவர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் பேசியே, அரசியல் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச, யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்குப் பற்றித் தெரியுமோ தெரியாது.

பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள், ‘இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டுமென முயற்சிப்பதில்லை. தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள்.

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம்.
ஆனால், இன்று வடக்கில் எந்தவிதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்து எந்தக் காலத்திலும் அரசியல் செய்தவர்கள் அல்லர். இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு நாட்டின் இளைஞர்கள், யுவதிகளே உயிரிழக்கப் போகின்றனர். இந்த மக்களே மீண்டும் அவ்வாறானதொரு சூழல் உருவாக விடமுடியாது.

நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை.

அதனால் தீவிரவாதிகளை நாம் ஏற்போது ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம்.

வடக்குக்கு அரசியல்வாதிகள் தான் போதைப்பொருட்களைக் கடத்தினார் என்ற குற்றசாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

விஜயகலா மகேஸ்வரன், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடும் போது, வடக்குக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகளின் வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டகாவும், மஹிந்த ராஜபக்ச, பணம் கொடுக்க முற்பட்டதாகவும் கூறப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

எந்த அரசியல்வாதிகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் போதைப்பொருட்களை கடத்தவில்லை. ஆனாலும், அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

அதேவேளை, நாம் அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அவருக்குப் பணம் வழங்குவதாக எந்தச் சந்தர்பத்திலும் கூறவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்குப் பொய்களைக் கூறியே, ஆட்சியமைத்தனர்.

மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ஷவே அறிவிப்பார். அதுவரையிலும் பொறுமையாக இருக்குமாறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் தனக்கில்லை.

அசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என்றும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Namal Rajapaksa commented Northern politicians