பிரான்ஸில், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதான நபர் ஒருவரை, சிலர் மிக மோசமாக தாக்கியதுடன், அவரின் வாய்க்குள் இருந்த தங்கப்பற்களை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். Mystery gang stole golden teeth fromm 37 year man Aubervilliers
இச்சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 29) Aubervilliers இல் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த நபரை சில கொள்ளையர்கள் சுற்றி வளைத்து, முதலில் அவரிடம் இருந்த தொலைபேசியை திருடியுள்ளனர்.
அதன் பின்னர் குறித்த நபரின் வாய்க்குள் தங்கப்பற்கள் கட்டப்பட்டிருந்ததை கவனித்ததும், குறித்த நபரின் தங்கப்பற்களை வெற்றுக்கைகளால் உடைத்து எடுத்துள்ளனர். அதன்பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் குறித்த நபரை மீட்டு செந்தனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கும்போது குறித்த நபரின் உயிருக்கு ஆபத்துக்கள் எதுவும் இல்லை எனவும், கொள்ளையர்கள் அவர்களின் கைகளால் நான்கு தங்கப்பற்களை இழுத்து பிடுங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
tags :- Mystery gang stole golden teeth fromm 37 year man Aubervilliers
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வேலி தாண்டிய பெண்ணிற்கு நடந்த கொடுமை (புகைப்படம் உள்ளே)!
- இஸ்லாமிய புனித இடங்களில் நிர்வாண போட்டோஷூட் (புகைப்படம் உள்ளே)!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.