incident shocked students Andhra raising alcohol harassing students
ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி சகமாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடன் படிக்கும் மாணவருக்கு பிறந்த நாள் என கூறி ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அந்த மாணவியும் பங்கேற்றுள்ளார்.
நேரம் செல்ல செல்ல மதுவுடன் ஆட்டம் பாட்டம் என கலைகட்டியது பார்ட்டி. அப்போது மாணவியையும் சக மாணவர்கள் மதுக்குடிக்க தூண்டியுள்ளனர். மாணவி மறுத்த போதும் வற்புறுத்தி மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளனர்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பு நண்பர்களான சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் மாணவியை பலாத்காரம் செய்ததை மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர்.
வீடியோவை வைத்து மிரட்டியே அந்த மாணவியை பலமுறை அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்த நிலையில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவனான பிரவீன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பலாத்கார வீடியோ தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு நிலைகுலைந்தார் அந்த மாணவி.
இதனால் கடந்த 2 மாதமாக கவலையுடன் இருந்த மாணவியை பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோருடன் சென்று போலீஸில் அவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் பிரவீனை கைது செய்த போலீசார், மற்ற 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
incident shocked students Andhra raising alcohol harassing students
tags;-accident aeroplane black box return
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :