army chief invite human rights council latest news lankan
ஒட்டுச்சுட்டான் – கற்சிலைமடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இராணுவத்தளபதி மற்றும் குறித்த இராணுவ முகாமின் படைத்தளபதி ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைகளுக்கு வருமாறு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பரந்தன் வழியாக புதுகுடியிருப்பிற்கு செல்லும் வழியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைத்தளம் அமைந்துள்ளது.
குறித்த தனியார் காணியில் பௌத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணி தனியார் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமையவே குறித்த காணி மற்றும் காணியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
army chief invite human rights council latest news lankan
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com