மகிந்தானந்தவின் சாரதியிடம் சாட்சி பதிவு – வழக்கு ஒத்திவைப்பு

0
448
tamilnews mahindananda aluthgamage courts case postponed

(tamilnews mahindananda aluthgamage courts case postponed)

சட்டவிரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி கொழும்பு, கிங்சி வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குரைஞர் துசித் முதலிகேவின் நெறிப்படுத்தலின் கீழ் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஓட்டுனராக பணிப்புரிந்த வசந்த ராஜபக்ச என்பவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குற்றம்சுமத்தப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகே, பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews mahindananda aluthgamage courts case postponed)

More Tamil News

Tamil News Group websites :