புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொலை : மருதானையில் ஒருவர் கைது

0
1200
aluthkade court shooting one arrested

(aluthkade court shooting one arrested)
புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானை – சேக்குவத்தைப் பகுதியில் வைத்து, குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும், குறித்த நபர் கொழும்பு – 12 ஐ சேர்ந்த 29 வயதுடைய நபர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதோடு, இதன்போது கொல்லப்பட்ட நபர் பாதாளக் குழுவின் தலைவர் மாக்கந்துர மதுஷூடன் ​தொடர்புடைய மொஹமட் ரிஸ்பான் என்பவராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:aluthkade court shooting one arrested,aluthkade court shooting one arrested