(Diaspora people pay money Mullivaikal Memorial Day)
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்காக பிரித்தானியா, கனடா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் இருந்து வடக்கிலுள்ள விடுதலை புலிகளின் ஆதரவுள்ள அமைப்புகளுக்கு உதவிப் பணம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழான திவயின இன்றைய தினம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு தூபிகளுக்கு அலங்காரங்கள் மற்றும் நினைவஞ்சலிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நினைவு கூறும் விழாவுக்காக பல புலம்பெயர்ந்த மக்கள், சுற்றுலா பயணிகள் போன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதர உள்ளதாகவும் சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், மே 15 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் ஈழம் கோரிய புலம்பெயர்ந்த மக்கள் பலர் ஜெனீவா மற்றும் சூரிச் நகரத்தில் இருந்து இலங்கைக்கு விமானச் சீட்டுக்களைப் பெற்றிருப்பதாகவும் அந்த நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் கனடாவின் ரொரான்டோ நகரில் இருந்தும் ஈழம் கோரிய புலம்பெயர்ந்த மக்கள் பலர் இலைங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
More Tamil News
- வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி உண்ட மஹிந்த அரசாங்கம்; அதிர்ச்சித் தகவல்
- கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவது தமிழ் மக்களின் உரிமை
- ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன பதக்கம் கண்டுபிடிப்பு
- ஒவ்வொரு நாளும் கட்டாயம் 2 லீற்றர் நீர் அருந்துக
- யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Diaspora people pay money Mullivaikal Memorial Day