கட்டுமான நிறுவனத்தின் கவனகுறைவால் ஊழியர் பலி!!

0
578
employee

(employee construction company)

சிங்கப்பூரில் , ZAP Piling எனும் கட்டுமான நிறுவனம் கவனக்குறைவாக நடந்துகொண்ட காரணத்தினால் அதற்கு 290,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காரணம் , 2016இல் ஆறுமுகம் இளங்கோ எனும் அந்நிறுவனத்தின் ஊழியர் வேலை செய்யும்போது அங்கு நேர்ந்த விபத்து ஒன்றில் பலியானார்.

மேலும்,  துளையிடும் கருவியின் 1.76 டன் எடைகொண்ட பாதுகாப்புத் தூண்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆகவே, ZAP Piling நிறுவனம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளவில்லை என்பது மனிதவள அமைச்சு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு , அந்நிறுவனம்  கனமான பொருட்களைத் ஏற்றி இறக்குவதற்குரிய உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற பல வேலைகளில் இருக்கும் அபாயங்களை ZAP Piling நிறுவனம் சரியாகக் கணித்து தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

tags:-employee construction company

most related Singapore news

பொய் கணக்கு காட்டி நோயாளியிடம் இருந்து பணம் வாங்கிய பல் வைத்தியருக்கு கிடைத்த தண்டனை!

மர்மமான சத்தத்தை அடையாளம் கண்ட வானொலி ரசிகர்!

உலகில் சிங்கப்பூர்- கோலாலம்பூர் பரபரப்பான சர்வதேச விமான இணைப்பாகும்

**Tamil News Groups Websites**