பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. பல வருடங்களாக திரையரங்கிற்கு வாராதவர்களை கூட இப்படம் அழைத்து வந்துள்ளது.
தமிழக வசூல்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 9 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 158 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இதன்முலம் தமிழகத்தில் ரூ. 153 கோடி வசூல் செய்திருந்த பாகுபலி படத்தின் சாதனையை தோற்கடித்துள்ளது பொன்னியின் செல்வன்.