புனித திருச்சிலுவை வழிபாடுகள்!

0
66

உலகெங்கும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று (29) புனித வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.

திருச்சிலுவைப்பாதையானது காலை குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் இருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலத்தினை சென்றடைந்தது.