யாழ்.பெண் வெள்ளவத்தையில் உயிரிழப்பு..!

0
145

கொழும்பு வெள்ளவத்தையில்   யாழ்ப்பாணத்தை சேர்ந்த  குடும்ப பெண்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில்  49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது. 

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், பெண்ணின்  கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்ட  யாழ்ப்பாணம்   சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேர்ந்த  விபரீதம்

இந்நிலையில்  சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது   கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளமை   விசாரணையில் தெரியவந்தது.

 உயிரிழந்த பெண்ணின்  சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்  , சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை  இளம்  குடும்ப பெண்  உயிரிழந்த  சம்பவம்  பெரும் சோகத்தினை  ஏற்படுத்தியுள்ளது.