யுனெஸ்கோ நிர்வாக சபைக்கு இலங்கை தெரிவு; 144 நாடுகள் ஆதரவு

0
222

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்துக்கு 58 உறுப்பு நாடுகளை யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவு செய்யும் தேர்தல் நேற்று புதன்கிழமை பாரிஸில் நடந்த 42ஆவது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நடைபெற்றது.

வாக்களிப்புச் செயற்பாட்டில் பங்குபற்றிய 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் ஒன்பது உறுப்பு நாடுகளில் ஆறு நாடுகள் யுனெஸ்கோவின் நிர்வாக குழுவின் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட ஏனைய நாடுகளாகும்.