இலங்கை அசானிக்காக பின்னணி குரல் கொடுத்த யாழ் குயில் கில்மிசா!

0
398

இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமையால் ஒட்டுமொத்த உலகவாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானிக்கு சில வாரங்கள் சரிகமப மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக அவர் பயன்படுத்தி வருகின்றார் என்றே கூறலாம்.

இந்த வாரம் நடைபெற்ற பக்தி பாடல்கள் சுற்றில் நடுவர்கள் முதல் சரிகமப அரங்கத்தினையே அசானி பக்தி பரவசப்படுத்தியுள்ளார்.

இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

“தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா” என்ற பாடலை பாடி உருக வைத்துள்ளார். இதில், சிறப்பம்சம் என்னவென்றால் அசானிக்கு பின்னணியில் யாழ்.குயில் கில்மிசாவும் பாடுகின்றார்.

இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.