பெரிய தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி; யாழில் சம்பவம்

0
165

யாழில் வீட்டில் தங்கி இருந்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இக் குற்றச்சாட்டில் அச் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

யாழில் பெரிய தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி | Girl Was Abused By Her Big Father In Jaffna

துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக அச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.