உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(28.06.2023) மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்திலே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதேவேளை, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.