அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (12.06.2023) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பிலும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு தொடர்பிலும் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.