யாழில் இளைஞர்களின் துணிச்சலான செயல்; பொலிசாரின் முன்னிலையில் கௌரவிப்பு நிகழ்வு

0
333

யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்தவரை மடக்கிப் பிடித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது இன்றையதினம் (28-10-2022) பலாலியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்நிலையில் சங்கிலியை அபகரித்த நபரை மடக்கிப் பிடித்தவர்களுக்கு பலாலி காவல்துறையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் காயத்திரி சிறிராம், திருவள்ளுவர் சனசமூக நிலைய நிர்வாகம், உதவிப் பொலிஸ் அத்தியட்சர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


https://www.taatastransport.com/