“ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?… பெருங்களத்தூர தாண்டல ஜானு…” சென்னை டிராஃபிக்கில் தீபாவளி வெளியூர் பயணம்… பறக்கும் மீம்ஸ்!

0
435

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். மீம் கிரியேட்டர்கள் அதை உள்ளடக்கமாக எடுத்து கலக்கி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை செய்வது என தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள். பொதுவாக, தீபாவளியன்று பெரும்பாலானோர் வீட்டில் விதவிதமான உணவுகளை சமைத்து, உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

முக்கியமாக பட்டாசுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வண்ணமயமான பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

முதலில் பேருந்துகளில் இருக்கை கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாட்களில், மனித தலையா அல்லது கடல் அலையா என்று சொல்ல முடியாத அளவுக்கு பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

அப்படி இருந்தும் இடம் கிடைத்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாது. “குறுக்க இந்தா கௌசிக் வந்தா” எனும் படி உங்களது பொறுமையை சோதிக்க பெருங்களத்தூர் உங்களை வரவேற்கும்.

பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பயணிகளின் அனுபவத்தை மீம்சாக படைப்பாளிகள் இறக்கி வருகிறார்கள். “ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்.. இன்னும் பெருங்களத்தூரையே தாண்டல ஜானு” என்பது போன்ற சிரிப்பு மீம்ஸ்களால் சமூக வலைதளங்கள் நிறைந்துள்ளன.

பேருந்தில் சோகத்துடன் பல மணிநேரம் உட்காந்திருப்பவர்கள் கூட  இந்த மீம்களை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.