போதைக்கு அடிமையாகி தங்கையை சீரழித்த அண்ணன்! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
1177

யாழில் கடந்த வாரம் போதைப்பொருள் பாவித்த உடன்பிறந்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் உயிரை மாய்த்துள்ளார்.

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வசிக்கும் 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் யுவதியின் சகோதரன் உட்பட நால்வர் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளதுடன் கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவரை போலீசார் வலை வீசி வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி;

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2022/09/12/brother-rapes-younger-sister-while-intoxicated-in-yali-sister-suicide/