தற்போதைய ஜனாதிபதி ரணில், ராஜபக்சேவை விட சர்வாதிகாரி!

0
420

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி என்றும் முன்னாள் நாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

ஹிருணிகா இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் , ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி ! | Ranil Rajapaksa Is More Dictator Than Rajapaksa

போராட்டங்களால் ஜனாதிபதியானார்

விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் , ராஜபக்ஸவை விட சர்வாதிகாரி ! | Ranil Rajapaksa Is More Dictator Than Rajapaksa

ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார் என்றும் ராஜபக்ஸவை விட ரணில் மிகவும் ஆபத்தானவர் எனவும் ஹிருணிகா கூறினார்.