சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர்!

0
345

சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளிடம் தவறாக நடத்துக்கொண்ட இந்திய வம்சாவளி வைத்தியருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் வைத்தியராக பணியாற்றி வரும் கிருஷ்ணா சிங் (வயது 72) என்ற இந்திய வம்சாவளி வைத்தியரே இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் கடந்த 1983- 2018 ஆம் ஆண்டு வரையில் அவரிடம் வைத்தியம் பார்க்க வந்த பெண் நோயாளிகளிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்தல், அசிங்கமாக பேசுதல், முத்தமிடுதல் போன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கிளாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த கிருஷ்ணா சிங், நோயாளிகள் தவறான தகவல்களை அளித்துவிட்டதாகவும் இந்தியாவில் தனக்கு மருத்துவ பயிற்சியில் கற்று கொடுத்த பரிசோதனைகளையே மேற்கொண்டதாகவும் கூறினார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், “மருத்துவத் தொழிலின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகவும் பெண் நோயாளிகளின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாகவும் கூறி தண்டனையை உறுதி செய்துள்ளது.