கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய இராணுவ தளபதி திடீர் முடிவு!

0
556

ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதியின் பதவியை இராஜினாமா செய்த பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அலுவலகத்திற்கு ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றியதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது பதவி வகித்து வரும் இராணுவப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவப் பிரதானி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில்  கோட்டாபயவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவு தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை இராணுவ  கட்டமைப்பிலும் சவேந்திர சில்வாவின்  திடீர் இராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.