சிட்னி பிஷப்பை தாக்கிய சம்பவத்தில் மேலும் 7 சிறுவர்கள் கைது!

0
41

 சிட்னி பிஷப்பை தாக்கிய சம்பவத்தில் மேலும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்திற்குள் புகுந்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த பிஷப்பை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எதிரொலித்தது.

கடந்த 16-ந்தேதி நடந்த இந்த பயங்கரவாத சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிஷப்பை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் 7 சிறுவர்களை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.