காலி போராட்டம்; நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த OIC

0
512

கடந்த 10 நாட்களாக அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக குறித்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடானது பொது மக்களின் பாதுகாப்பிற்கு தடையாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் சுகயீனம் அடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் நாட்களில் காலி போராட்டத்தில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் B அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.