மதுபானம் அருந்தியவர்களில் மூன்றாவது நபரும் இவ்வுலகை விட்டு பிரித்தார்…. ஒருவரின் நிலை கவலைக்கிடம்

0
558
vadhuva function drinking alcohol three person dead police inquire

வாத்துவை கடற்கரை உணவகமொன்றின் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். vadhuva function drinking alcohol three person dead police inquire

31 வயதுடைய நபரொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக பாணந்துறை மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி , இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மூன்று பேர் தற்போதைய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனமொன்றினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 20 மற்றும் 36 வயதுடைய இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றைய தினம் உயிரிழந்ததோடு இன்றைய தினம் குறித்த நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த வாரம் வவுனியாவிலும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்ற பின்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குடும்பஸ்த்தர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து மதுபானத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
vadhuva function drinking alcohol three person dead police inquire

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites