தாயின் கவனயீனத்தால் 3 வயது குழந்தை கால்வாயில் வீழ்ந்து பரிதாபமாக ….

0
447
mother careless three years child fallen canal matale kandy

மாத்தளை – ஒலகன்வத்த பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் வீழ்ந்து ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. mother careless three years child fallen canal matale kandy

அகுரன்பட பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

தனது தாயுடன் ஒலகன்வத்த பிரதேசத்தில் நீராட சென்றுள்ள நிலையில் , தாய் கால்வாயின் ஓரத்தில் ஆடைகளை சலவை செய்துக்கொண்டிருந்த போது குழந்தை கால்வாயில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
mother careless three years child fallen canal matale kandy

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites