ஈராக் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு விமானிகள் பறக்கும் விமானத்தில் சாப்பாட்டு தட்டிற்காக சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Fight pilots dining dash flying plane)
மேலும் குறித்த விமானம் ஈரானின் மாஷாத் நகரில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு 157 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது துணை விமானி தமக்கான உணவை விமான பணிப்பெண் ஒருவரிடம் எடுத்து வர பணித்துள்ளார். ஆனால் விமானியோ அதை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரையில் சென்றுள்ளது. அது மட்டுமின்றி விமானியே தமது உணவை தாமே எடுத்து சாப்பிட்டதாகவும், ஆனால் துணை விமானி பணிப்பெண்ணிடம் எடுத்து வர பணித்ததும் விமானி அதை தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் பாக்தாத் நகரில் பத்திரமாக தரையிறங்கிய பின்பும் இரு விமானிகளும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிர்வாகம் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளது. அது மட்டுமின்றி குறித்த விமானிகள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
tags :- Fight pilots dining dash flying plane
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பார்வையாளர்களை வியக்க வைக்கும் அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள்…!!!
- சிறுநீரகத்தில் 3,000 கற்களுடன் வாழ்ந்த பெண்
- தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த முடிவு!
- இத்தாலியில் பேரிடர் மீட்புப் பணியில் பயன்படும் ரோபோ கண்டுபிடிப்பு
- போக்குவரத்து நெரிசலுக்கு சீன இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு
எமது ஏனைய தளங்கள்