சட்ட மா அதிபரின் ஆய்வின் பின்னரே தீர்மானிக்கப்படும்

0
465
province election report lost parliament yesterday minority political party

சட்டமா அதிபரினால் ஆராயப்பட்டதன் பின்னர் 20 ஆவது திருத்த சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவல தெரிவித்தார். gazette after debate parliament twenty amendment solicitor general

மக்கள் விடுதலை முன்னணியினால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்ற செயலாளிரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவலவிடம் எமது செய்திபிரிவு தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், சட்டமா அதிபரினால் குறித்த வரைவு ஆராயப்பட்டதன் பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் அதன் பின்னரே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் உள்ளிட்ட பல திருத்தங்களை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு யோசனை கடந்த 25 ஆம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
gazette after debate parliament twenty amendment solicitor general

More Tamil News

Tamil News Group websites :