ஐ.எஸ் படைகளின் ஆவேச தாக்குதலில் 35 இராணுவ வீரர்கள் பலி!
Share

(Syria ISIS Terrorists Attack Killed 35 Armed Forces)
சிரியாவில் டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo source : english.al-akhbar.com
உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜிஹாதி குழுவினர் அங்குள்ள பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இவர்களை எதிர்த்து ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)