தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை

0
2111
hirusnavi murdered updates

(hirusnavi murdered updates )
வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வந்த 14 வயது பாடசாலை மாணவியான கங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வண்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது வழக்கு விசாரணைகள் நேற்று வவுனியா நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும் 20.08.2018 அன்றைய திகதிக்கு தவணை திகதியிடப்பட்டுள்ளது.

தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி வடக்கில் கிடைக்கவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு வழக்குத் தவணைகளிலும் ஒவ்வொரு காரணங்களைக்கூறி திகதியிடப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்றதே தவிர ஒரு தீர்வு கிடைக்கவில்லை. என்ன காரணத்திற்காக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது பல பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தெற்குப்பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.

அங்கு காட்டப்படும் கரிசனைகள் இங்கு எமக்குக்கிடைக்கவில்லை. ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சட்டத்திலிருந்து குற்றவாளி தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இன்று வரை நீதிமன்றத்தை நம்பியுள்ளோம். என்று மேலும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஹரிஸ்ணவியின் வழக்கில் சட்டத்தரணிகளை மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமாறு நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொண்டு வழிநடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை