காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!

0
559
seizure liquor bottles Karaikal tamilnadu

seizure liquor bottles Karaikal tamilnadu

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைக்காலில் இருந்து வந்துகொண்டிருந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர், அப்போது அந்த வேனில் 74 பெட்டிகளில் 3,550 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு விற்பனைக்காக கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது,

வேனுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சீர்காழி திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

பறிமுதல் செய்யப்பட்ட வேன் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் 4 லட்சம் ருபாய் ஆகும்.

More Tamil News

Tamil News Group websites :