மைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா!

0
1247
TAMIL NEWS sarath fonseka involved army mater complaint

(sarath fonseka apologized maithripala sirisena)
நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக்  கோரியுள்ளதாக  தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இதுதொடர்பில் ஜனாதிபதியும் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் ஜனாதிபதியிடம் பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும் என பல உறுப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை