(Britain Mother Deliver 4 Babies Life After 5 Years)
பிரித்தானியாவில் வசிக்கும் இளம் தாயார் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
அதுமட்டுமின்றி இவரின் ஒரே கருமுட்டையில் இருந்தே 4 பிள்ளைகளும் பிறந்துள்ளதும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
உலகில் 70 மில்லியம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அரிதாக இது போன்ற சந்தர்ப்பம் அமையும் என கூறப்பட்டுள்ளது.
![](http://tamilworldnews.com/wp-content/uploads/2018/05/Britain-Mother-Deliver-4-Babies-Life-After-5-Years.jpg)
இந்த தாயார் கிறிஸ்டின் கிளார்க் தற்போது எப்படி இருக்குறார் என்னும் சிறிய தேடல் ஒன்று இதோ.
சாதனையுடன் பிறந்த 4 குழந்தைகளும் தற்போது 5 வயதை அடைந்து விட்டார்கள். நான்கு பிள்ளைகளின் பிறந்த நாளையும் சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
குறித்த நான்கு குழந்தைகளினதும் விருப்பங்களும் தனித்தனியாக உள்ளது. மட்டுமின்றி தமது மகள்கள் நால்வரை மிகவும் கண்டிப்புடனும் அதே வேளையில் அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து வளர்த்து வருகின்றனர்.
அவரவர் உடைகளை வேறுபடுத்துவது இயலாமல் போன நிலையிலே புத்திசாலித்தனமாக அவர்கள் நால்வரும் தங்களுக்குள்ளே உடைகளை மாற்றிக்கொண்டனர்.
![Britain Mother Deliver 4 Babies Life After 5 Years](http://tamilworldnews.com/wp-content/uploads/2018/05/Britain-Mother-Deliver-4-Babies-Life-After-5-Years-1.jpg)
இந்த குழந்தைகளை பெறுவதற்கு முன்னர் , சுமார் பத்தாண்டு காலம் மகப்பேறுக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்ட நிலையில் ஒரே தடவையில் இந்த நான்கு குழந்தைகளும் இந்த பெற்றோருக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Photo Source : dailymail.co.uk
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)