பிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு!

0
1231

பிரான்ஸ் நாட்டிலுள்ள நோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் 25 ம் திகதி காணாமற் போன 13 வயது சிறுமி மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.13 year child Angelique murder Paris

Wambrechies நகரில் வசிக்கும் Angelique எனும் 13 வயது சிறுமியே நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று முழுவதும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை இதனால் பதட்டம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 3 நாட்கள் கழித்து Quesnoy-sur-Deule பகுதியில் உள்ள காடு ஒன்றில் இருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்ட சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 45 வயது நபர் ஒருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அந்த நபர் மீது ஏற்கெனவே பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most related Tamil news

**Tamil News Groups Websites**