ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு உலகக்கிண்ண தொடர்: இரசிர்கள் கொண்டாட்டம்!

0
834
icc champions trophy stoped t-20 world cup india

(icc champions trophy stoped t-20 world cup india)

கிரிக்கெட் உலகில் உலகக்கிண்ணத்துக்கு அடுத்த படியாக உயரிய கிண்ணமாக கருதப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதற்கு பதிலாக தற்போது கிரிக்கெட் இரசிர்கள் பெரிதும் விரும்பும், ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்த ஐ.சி.சி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு பதிலாக, அதே ஆண்டில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடத்தப்படுமென ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறுகின்றது.

2009, 2010ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ஒரு உலகக்கிண்ண தொடர் நடைபெறுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

(icc champions trophy stoped t-20 world cup india)
<<Related News>>