கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான “போர் நிறுத்தத்தை” ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்” என்று தெரிவித்தார். ஆனால் மெக்ரோனின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் “விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை” ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார்.
நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும் இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்” என்று தெரிவித்தார்.