சிறப்பு அதிரடிப் படையின் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

0
572

திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் பயணித்த பேருந்து மீது சற்றுமுன்னர் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Trinco Special Forces Army Bus Stone Thrown Attack Tamil News

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியினூடாக பயணித்த பேருந்து மீதே தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து படையினர் சந்தேகநபரை துரத்தி மடக்கிப்பிடித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கல்வீச்சு நடத்திய நபர் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்தவர் எனவும், அவர் மொறவெவ, கன்னியா மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக நடமாடி வருபவர் எனவும் அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

கல்வீச்சு நடத்தியவரை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites