அரச நிதிக் குழுவின் புதிய தலைவர் ராஜினாமா!

0
357

அரச நிதிக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இதனை மயந்த திசாநாயக்க தமக்கு அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கிறார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர் நிதிக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மயந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார்.