நாட்டின் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நாமலை சந்தித்த சீன தூதர்

0
612

தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க் கட்சியால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இலங்கை பொதுசன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.