தங்கம் கலந்த மணல் ஏற்றுமதி செய்யப்படுகிறதா? இலங்கையிலிருந்து எங்கே செல்கிறது?

0
442
reports fraudulent trading exports gold Sri Lanka tamil news

(reports fraudulent trading exports gold Sri Lanka tamil news)

இலங்கையிலிருந்து தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் பாரிய மோசடி வர்த்தகம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுங்கத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 மணல் கொள்கலன்களிலுள்ள மணல் மாதிரிகளை சோதனையிட்ட போது, அவற்றில் தங்கம் கலந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோதமாகத் தங்கம் கலந்ததாக கூறப்படும் மணலை ஏற்றுமதி செய்யும் குற்றச்சாட்டின் கீழ், 50 இலட்சம் ரூபா அபராதம் விதித்து, கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கொள்கலன்கள் சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னரே இவை தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு இதுபற்றி அறிவித்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

(reports fraudulent trading exports gold Sri Lanka tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites