புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவன், பிணை நிபந்தனையை மீறியதால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (Remarriage puttalam Pradeshiya Sabha chairman)
மதுரங்குளி பகுதியில் 2010 ஆம் ஜனவரி 16 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அஞ்சன சந்தருவன் மீது புத்தளம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விசாரணைகளின் போது பிணை நிபந்தனையாக வெளிநாட்டிற்கு செல்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், அஞ்சன சந்தருவன் பிணை நிபந்தனைகளை மீறி கடந்த 9 ஆம் திகதி வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர் இன்றைய தினம் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.எம். படபெதிகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
- ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு
- 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Remarriage puttalam Pradeshiya Sabha chairman