எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government)
அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய வரிக் கொள்கைக்கு அமைவாக ஏப்ரல் 01ம் திகதி முதல் வைத்தியர்களின் வருமானத்தில் இருந்து நூற்றுக்கு 24 வீத வரி அறவிடப்படுவதுடன், அதனை நூற்றுக்கு 12 வீதமாக குறைக்குமாறு விஷேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருடன் விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கம் நேற்று (11) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதியமைச்சர், அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து பேச்சுவார்த்தை இறுதித் தீர்வின்றி நிறைவடைந்ததாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இன்றைய தினம் சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- Private doctors decision government
- பிரான்ஸ் பாடசாலைக்குள் 100kg கஞ்சா; பத்திரமாக பாதுகாக்க இப்படியும் ஓர் திட்டம்..!!!
- சேலையால் அநியாயமாய் போன உயிர்..!
- சட்டவிரோத கட்டிடங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள்!!
- ஜனாதிபதியாக நான் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவமானமும், நெருக்கடியும்
- கோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த
- கோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..!
- இலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது
- திருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்
- எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்
- ஜனாதிபதி மாமா அப்பாவுடன் வாருங்கள்! ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி
- பாதாள உலக மத்திய நிலையம் இலங்கையில்..!!
- தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பம்; விடுமுறைகள் இரத்து..!!
- டிப்பருடன் மோதிய முச்சக்கரவண்டி – 3 உயிர்களை காவு கொண்ட அனர்த்தங்கள்
- கோத்தாவுக்கு எதிராக போர்க் கொடி வாசுதேவ..!!
- மன்னார் புதைகுழி அகழ்வு பணியில் பல்கலைக்கழக மாணவர்கள்?