இரத்தினபுரி – கலெந்த பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்கு கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். Policeman strangled death Buddhist monk news Tamil
இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறிய புகார் பிரிவில் சேவை புரிந்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கலெந்த பௌத்த விகாரையில் உள்ள பிக்குவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. இதுதொடர்பில் விசாரணை செய்ய பொலிஸ் அதிகாரி குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த பிக்கு பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கு இடையில் உயரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிக்குவை கைது செய்வதற்கு இரத்தினபுரி பொலிஸ் தலைமை அதிகாரி குறித்த இடத்துக்கு சென்ற போது பிக்கு, அவர் மீது கைக்குண்டு ஒன்றையும் வீச முற்பட்டுள்ளார்.
எனினும் பிக்குவை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Policeman strangled death Buddhist monk news Tamil, Policeman strangled death Buddhist monk news Tamil