இன்றைய நாடாளுமன்ற அமர்வில் காலியாக இருந்த எதிர்கட்சி ஆசனங்கள்

0
25

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மாலை நேர விவதத்தில் போது எதிர்கட்சி ஆசனங்களில் ஒருவரும் இல்லாது போயிருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நேரம் மாலை 5.10 மணி.பட்ஜெட் விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. காலையில் வந்து ஊடகங்களுக்கு குரல் கொடுத்து தங்களை காண்பித்துக்கொண்ட எவரும் மாலையில் இல்லை.

பட்ஜெட் விவாதத்திற்கு எதிராக யாரும் இல்லையென்பது பரிதாபம். நாட்டின் மிக முக்கியமான அமைச்சுக்களில் ஒன்றான சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தின் பட்ஜெட் விவாதத்தின் போது எதிர்க்கட்சி பங்கேற்பு இன்றி நாடாளுமன்றம் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.