எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய முறை

0
297

எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகு தவணை முறையில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தவணை முறையில் பணம் 

மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலகு தவணைக் கட்டண முறை மாத்திரமன்றி எதிர்காலத்தில் மின்சார நுகர்வோருக்கு மேலும் சில சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.