முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டனர்.